Text Widget

Ads300x250

மாயமான விமானமா? செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா

Posted by Anonymous  |  at  8:21 AM

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட விமானம், கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது.
இதில் பயணம் செய்த 239 நபர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை, மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39 விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் மலாக்கா கடல் பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும், எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில், கடந்த 9ம் திகதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 3 பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
அது காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆயினும் இதுகுறித்து மலேசியா அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top