Text Widget

Ads300x250

இருளில் மூழ்கிய வட அவுஸ்திரேலியா

Posted by Anonymous  |  at  8:19 AM

வட அவுஸ்திரேலியாவிலுள்ள துணை மின்நிலையம் ஒன்றின் மின்னிணைப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோளாறினால், அந்தப் பகுதியின் பெரிய நகரமான டார்வினையும் அதனைச் சுற்றி 300 கி.மீ தொலைவு வரையிலுள்ள சிறு நகரங்களையும் செயலிழக்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த அரசாங்க அலுவலகங்கள் இயங்கவில்லை. பேருந்துப் போக்குவரத்து வலையமைப்பு பாதிக்கப்பட்டதால் பேருந்துகளும் இன்று செயல்படவில்லை. நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் இதில் பாதிக்கப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சாலை சந்திப்புகளில் காவலர்கள் போக்குவரத்தைக் கண்காணித்தனர்.
நகரின் மருத்துவமனைகளும், விமான நிலையமும் ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கின. பொதுத் துறை ஊழியர்கள் அனைவரும் அவர்களுடைய அலுவலகம் அறிவிக்கும்படி வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இன்றைய நீட்டிக்கப்பட்ட செயலிழப்பினால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மின் மற்றும் நீர் வழங்குதுறை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதன் அவசர மேலாண்மை நெறிமுறைகளைத் திரட்டியுள்ளதாக குறிப்பிட்டது. 1,30,000 பேர் வசித்துவந்த பகுதியைப் பாதித்த இந்த மின்வெட்டு தெற்கே உள்ள கேத்தரின் நகரம் வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து இணைப்புகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் முறையாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்த வடக்கு மாகாண அரசு இதுகுறித்து ஒரு விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top