All Stories

Text Widget

Ads300x250

விமான விபத்து- போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம்? திட்டமிட்ட சதிச் செயலா?

மலேசிய விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்கிற்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானம் கடலில் விழுந்ததில் பயணம் செய்த 239 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய விசாரணையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த 4 பேர், போலி பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் விமானம் மாயமானதில், பயங்கரவாத அமைப்புக்களின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

Posted at 6:06 PM |  by Anonymous

239 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 239 பயணிகள் இருந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சிறு பிள்ளைகள் அடங்கலாக 227 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் இந்த விமானம் காணாமல் போயுள்ளது.
ஆசியாவில் மிகப்பாரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான மலேசிய விமான சேவை, நாளாந்தம் 37 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோ சு தீவில் ப விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது, விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.

Posted at 1:26 PM |  by Anonymous

ஈபிள் கோபுரத்தை திருடும் நபர்! இணையத்தை கலக்கும் வீடியோ

பிரான்சின் உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரை நபர் ஒருவர் திருடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஸாச் கிங் என்ற 26 வயது மிக்க நபர் பலவிதமான மாயாஜாலங்களை புரிந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
இவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை திருடுவது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார்.
7 விநாடிகளை கொண்ட இந்த வீடியோவை கண்டு பலர் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் இவர் செய்வது கண்கட்டு வித்தைகள் என்றாலும், இவற்றை கண்டு ரசிக்கவே ஆயிரக்கணக்கானோர் இணையதளத்தில் திரண்டுள்ளனர்.
சாத்தியமற்ற விடயங்களையும் இயல்பாக மாற்றுவதே தனிச்சிறப்பாய் கொண்ட இவரது வீடியோக்கள் பல்லாயிரகணக்கானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

Posted at 1:25 PM |  by Anonymous

சர்வதேச மகளிர் தினத்தில் சோக செய்தி! பாலியல் கொடுமை அதிகரிப்பு

உலகில் உள்ள பெண்களில் 10 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஐரோப்பிய யூனியன் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி 15 முதல் 74 வயது வரையுள்ள பெண்களிடம் நடத்திய நேரடி ஆய்வு அறிக்கையை ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ளது.
பதினைந்து வயதிற்கு கீழுள்ள பெண்களில் 20 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவர்களில் 12 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டதை தெரிவித்துள்ளனர்.
உறவினர்களால் 27 சதவீத குழந்தைகள் செக்ஸ் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் மற்றும் இந்நாள் கணவர்களால் கொலை மிரட்டல், சுதந்திரத்தில் தலையிடுதல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்ற மன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக 43 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மட்டும் 90 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 7 பேரில் ஒருவர் மட்டும் தன் குடும்பத்தாரிடமும், பொலிசிலும் தெரிவித்துள்ளனர்.

Posted at 1:23 PM |  by Anonymous

Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடு

Sony நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாகவுள்ள Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் வெளியிடப்பட்டுள்ளது.
முதன் முதலில் நெதர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையை நெதர்லாந்தே தீர்மாத்துள்ளதுடன் இதன் விலையானது 289 யூரோக்களாக காணப்படுகின்றது.
இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x 960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Snapdragon 400 Processor, 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா, 2,300 mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.

Posted at 1:21 PM |  by Anonymous

Outlook பயனர்களுக்கான Skype அறிமுகம் (வீடியோ இணைப்பு

மைக்ரோசொப் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனைப் பயன்படுத்துபவர்களுக்கான புதிய Skype இடைமுகம் உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Outlook கணக்கினை வைத்திருப்பவர்கள் தமது கணக்கினைப் பயன்படுத்தியவாறே நண்பர்கள், உறவினர்களுடன் Skype மூலமாக பேச முடியும்.

உயர் தர (HD) வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய வசதியினைக் கொண்டுள்ள இப்புதிய Skype சேவையினை பெறுவதற்கு பிரத்தியேக கணக்கு எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Posted at 1:20 PM |  by Anonymous

மலேசியாவில் குறைந்த விலையில் Nokia X ஸ்மார்ட் கைப்பேசிகள்

கடந்த மாதம் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் நோக்கியா நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான Nokia X இனை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் இக்கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ளது.
120 டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியில் 4 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை காணப்படுவதுடன் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Snapdragon Processor, பிரதான நினைவகமாக 512MB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 4GB என்பனவும் காணப்படுகின்றன.
மேலும் 3 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1500 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Posted at 1:18 PM |  by Anonymous

இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா

உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.
இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும்.
இதேவேளை Karbonn நிறுவனமும் Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தி தொடர்பான மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளதுடன் அதன் கைப்பேசி இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted at 1:17 PM |  by Anonymous

தொலைபேசி பிறந்த கதை

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது….
ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்…
கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை



முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.
அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.
இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.
காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.
தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.
பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.
அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.
1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.
திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.
பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.
பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.
அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.
தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.
பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.
பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.
இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.
அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...

Posted at 1:16 PM |  by Anonymous

இலவசமாக ஒன்லைனில் கோப்பு மாற்றம் செய்தவற்கு

ஒரு வகையான கோப்பினை பிறிதொரு வகையான கோப்பாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவ்வாறே இவ்வசதியை ஒன்லைனில் தரும் சில இணையத்தளங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில குறைந்தளவான கோப்பு வகைகளையே மாற்றம் செய்ய முடிவதுடன், பெரும்பாலானவற்றில் பணம் செலுத்தியே இச்சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் CloudConvert எனும் இணையத்தளமானது இச்சேவையினை முற்றிலும் இலவசமாக வழங்குவதுடன், நூறிற்கு அதிகமாக கோப்பு வகைகளை மாற்றும் வசதியை கொண்டுள்ளது.
அவற்றில் பல்வேறு Audio, Video, Document, Ebook, Archive, Image, Spreadsheet மற்றும் Presentation கோப்புகளும் அடங்கும்.

Posted at 1:12 PM |  by Anonymous

தமிழர் பிரதேச இழப்பு, இறப்புக்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லை!

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவுக்குப்பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற இறப்புகள், இழப்புகள் தொடர்பில், இன்றுவரை சரியான புள்ளிவிவர அறிக்கைகள் இடப்படவில்லை என வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னரான காலப்பகுதியில் 9 இலட்சம் சிறுவர்கள் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச தொண்டு நிறுவனமான யுனிசெப், தனது சுயாதீன புள்ளி விவர தகவல் சேகரிப்பில் அறிக்கையிட்டுள்ளது.

போரினால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு, போசாக்கின்மை, சுகாதார சீர்கேடுகள், நேரடி காயங்கள், கண்ணி வெடிப்புகள் போன்ற பாதிப்புகளினால், வன்னி பிராந்தியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இறப்பு பிறப்பு வீதம் (ஐகெயவெ ஆழசவயடவைல சுயவந) ஆயிரம் பிறப்புகளுக்கு இறப்பு வீதம் 41 ஆகவும், சமநேரத்தில் இலங்கை முழுவதும் 23 ஆகவும், தென் இலங்கையில் 14 ஆகவும் பதிவாகியிருந்தன.

இந்த பதிவுகளிலிருந்து, சிங்கள ஆட்சியாளர்களால் எமது நிலத்தின் மீது, தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் மற்றும் வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்ற உண்மை புலனாவதோடு, இந்த போரால் தமிழர் தாயக பிரதேசங்களே மோசமாக சிதைக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவுக்குப்பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற இறப்புகள், இழப்புகள் தொடர்பில், இன்றுவரை சரியான புள்ளிவிவர அறிக்கைகள் இடப்படவில்லை. இன்னோரன்ன பல விடயங்களில் பலரும் தமக்கு சாதகமாக, தமது தேவைக்கேற்ப எழுந்தாமானமாக புள்ளி விவரங்களை காட்டுகின்றனர். பயன்படுத்துகின்றனர். தொலைத்தொடர்பு, அத்தியாவசிய கல்வி, சத்துணவு, போக்குவரத்து, சுகாதார வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை போர் மோசமாக சீர்குலைத்திருந்ததால்; இறப்பு வீதங்களின் தாக்கங்கள், அவர்கள் சொல்வதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை நிலையாகும் என தெரிவித்தார்.

Posted at 9:09 PM |  by Admin

தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் - நாராயணசாமி

தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வை எட்டி ஒப்பந்தம் செய்வதற்கு இந்தியா மற்றும் தமிழக அரசுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய–இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு மீனவர்களும் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த காலங்களில் மீன்பிடி தொழில் செய்வது? என்பது குறித்து இருதரப்பினருக்கிடையே ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மீனவர்களையும், படகுகளையும் இலங்கை அரசு விடுவித்தது.

ஆனால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களே தவிர, அவர்களது 8 படகுகளை இலங்கை அரசு இன்னமும் விடுவிக்கவில்லை. இலங்கையில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி குமரனை தொடர்பு கொண்டு பேசி, காரைக்கால் மீனவர்களின் 8 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசு தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை சிறைபிடிப்பதும் கண்டனத்திற்குரியதாகும். இது சுமூகமான பேச்சுவார்த்தைக்கு நல்லதல்ல.

எனவே தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வை எட்டி ஒப்பந்தம் செய்வதற்கு இந்தியா மற்றும் தமிழக அரசுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், இலங்கை மனித உரிமைகளை மீறி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், இதுதொடர்பாக ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தபோது, அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

தற்பொழுது மீண்டும் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் உரிய முடிவை எடுப்பார் எனவும் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

Posted at 8:56 PM |  by Admin

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் பட்டதாரிப் பயிலுனர்களுடனான சந்திப்பு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமனம் பெற்று வந்திருக்கும் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ர அதிகாரியும் முன்னாள் நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேச செயலாளருமான ஆன கோபாலரெட்ணம் அவர்கள் நேற்று (22.01.2014) அன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுடனான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பட்டதாரிப் பயிலுனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இதுவரை எந்தவிதமான  திணைக்களம், அமைச்சுக்களின்கீழ் உள்வாங்கப்படாதவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன். பட்டதாரிப் பயிலுனர்களின் சம்பள விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.




Posted at 3:01 PM |  by Admin

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்





ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் 16-01-2014 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் தமது 2006ம் ஆண்டு 06ம் மாத சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டைகளுடன் மழையினையும் பாராது தமது ஆர்ப்பாட்டத்தினை தொடங்கினர்.இவர்களுடைய கோரிக்கையில் சில தற்காலிக ஊழியரினை நிரந்தரமாக்கல் ,மேலதீக நேரக்கொடுப்பனவுகள் வழங்கள் ,சீருடை கொடுப்பனவை ஒரே தடவை வழங்குதல் ,அபாய கொடுப்பனவை அதிகரித்தல் போன்ற பல கோரிக்கைகளினை முன்வைத்து தமது ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தனர்.

By:- ( I.Suken )

Posted at 11:07 PM |  by I.Suken

களுதாவளையின் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு


மட்டக்களப்பு களுதாவளையில் இன்று புதிய ஆரம்பப்பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலை களுதாவளையில் அமையப்பெற்ற 6வது ஆரம்பப்பாடசாலையாகும்.

இப்பாடசாலைக்கு  மட் /களுதாவளை விக்னேஸ்வரா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பாடசாலையினை   பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந .புள்ளநாயகம் அவர்களால் களுதாவளை -01 ல் சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.










Posted at 3:12 PM |  by Admin
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top