இரு கால்களையும் இழந்த பெண் ஒருவர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்தவர் சூ ஆஸ்டின், 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இவரது இரு கால்களும் செயல் இழந்தன.
ஆனால் நீச்சல் என்றால் ஆஸ்டினுக்கு பிரியம், இதனால் தான் முன் போலவே நீந்த வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதன் பின் தனக்கு ஏற்றாற் போல், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து நீச்சல் பழகினார்.
இதனை தொடர்ந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளார்.
இந்த சக்கர நாற்காலியில் விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
மேலும் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில்
வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்திலும் சுழல
முடியும்.
இதனால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட
தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.