மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.
மைக்கேல்
ஜாக்சனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும் Harvard Medical School
sleep expert, Charles Czeisler என்பவர் தனது அறிக்கையில், மைகேல் ஜாக்சன்
தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள்
தூங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக
தூங்காமல் இருந்தது மைக்கேல் ஜாக்சனாக தான் இருக்கும் என்றும்
கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த Dr. Murray
அறியவில்லை என்றும், இதற்காக எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை
எனவும் மைக்கேல் ஜாக்சனின் தாயார் தெரிவித்துள்ளார்.