ஆனால், இப்போது தமிழில் ரிலீஸ் செய்து விட்டு இரண்டு வாரங்கள் கழித்து ஆந்திராவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ஜனவரி 10-ந் திகதி ஆந்திராவில் சங்கராந்தி என்பதால் அங்குள்ள பிரபல ஹீரோக்களான மகேஷ்பாபு நடித்த 1, ராம்சரண் நடித்த எவடு ஆகிய படங்கள் வெளியாகிறதாம். அதனால் பிரமாண்ட தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே கைப்பற்றி விட்டார்களாம்.
ஆக, அஜித் படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை சிவா இயக்கிய சில தெலுங்கு படங்கள் ஹிட்டாகியிருப்பதோடு, தமன்னா வீரம் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், தெலுங்கிலும் அஜித்தின் கொடி பறக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், அங்குள்ள ஹீரோக்களுடன் போட்டிக்கோதாவில் இறங்கினால், கிடைக்கிற வசூலும் இல்லாமல் போய் விடும் என்பதால் புத்திசாலித்தனமாக ரிலீஸ் திகதியை பின்தள்ளி வைத்திருக்கிறார்களாம்.