வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதுவரை அவரை தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவே செய்திகள் வந்தன. ஆனால், தற்போது, சீனாவில் வெளியாகியுள்ள தகவலில், ஜாங் சாங் தேக் மற்றும் அவரது 5 உதவியாளர்கள் 120 பசிகொண்ட நாய்களைக் கொண்டு கடித்து குதறவிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.