Text Widget

Ads300x250

25 சவரன் தங்க நாணயம் பதிக்கப்பட்ட வெள்ளி கேடயம் : ரவிகுமாருக்கு கமல்ஹாசன் வழங்கினார்.

Posted by Unknown  |  at  5:00 PM

சென்னை,ஜன.07 (டி.என்.எஸ்) இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் 25வது சினிமா ஆண்டை கொண்டாடும் வகையில், ராஜ் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், 25 சரவரன் தங்க நாணயம் பதிக்கப்பட்ட வெள்ளி கேடயத்தை, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருக்கு, ராஜ் டிவியின் சார்பில் கமல்ஹாசன் வழங்கினார்.

சேரண் பாண்டியன், நாட்டாமை, முத்து, படையப்பா, தசாவதாரம், தெனாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் தமிழ்த் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகின்றன. சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடும் ரவிகுமாருக்கு பத்மஸ்ரீ கமல்ஹாசன் தலைமையில் மாபெரும் பாராட்டு விழாவினை ராஜ் டிவி நிறுவனம் சமீபத்தில், சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தியது.
 25 சவரன் தங்க நாணயம் பதிக்கப்பட்ட வெள்ளி கேடயம் : ரவிகுமாருக்கு கமல்ஹாசன் வழங்கினார்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், விஜயகுமார், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், மதன் பாப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், அம்பிகா, ரேகா, தேவயாணி, சங்கீதா, குட்டி பத்மினி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.ஆர், செயலாளர் டி.சிவா, தென்னிந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த சுரேஷ், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கே.முரளி, பிரமிட் நடராஜன், எச்.முரளி, கே.எஸ்.சிவராமன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, சேரன், ஆர்.சுந்தர்ராஜன், ரவி மரியா, ஈ.ராம்தாஸ், எழில், சந்தான பாரதி, சி.ரங்கநாதன், இசையமைப்பாளர்கள் தேவா, சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

விழாவில் நடிகைகள் சமீரா ரெட்டி, லஷ்மிராய், நீது சந்திரா, ரம்யா நம்பீசன், இனியா, மணிஷா, சுஜா, பூர்ணா, சந்தியா, சஞ்சிதா படுகோனே, நடிகர் மகேந்திரன் ஆகியோரின் நடன் நிகழ்ச்சிகளும், பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையிலான பட்டி மன்றமும் நடைபெற்றது.

ரவிகுமாரின் வெள்ளி விழா ஆண்டையொட்டி 25 சவரன் தங்க நாணயங்கள் பதிக்கப்பட்ட வெள்ளிக் கேடயம் ஒன்றை, ராஜ் டிவி சார்பில், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடிகர் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிகுமாருக்கு வழங்கினார். மேலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ராஜ் டிவி சார்பில், ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனை, ராஜ் டிவி உரிமையாளர்கள் எம்.ராஜேந்த்ரிஅன், எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன், எம்.ரகுநாதன் ஆகியோர் இணைந்து வழங்க, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வகணி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரவிகுமாரின் மனைவி மற்றும் அவருடைய மகள்கள், அவரைப் பற்றிய சுவையான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றி, தற்போது இயக்குநர்களாக உள்ளவர்களும், அவரிடம் தற்போது உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்களும், இயக்குநர் சேரன் தலைமையில் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மேடையில் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் வரவேற்புரை நிகழ்த்த, ராஜ் டிவி நிர்வாக இயக்குநர் எம்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சி விரைவில் ராஜ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. (டி.என்.எஸ்)

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top