Text Widget

Ads300x250

மனித வெடிகுண்டாக மாறிய 10 வயது சிறுமி அதிரடி மீட்பு!!!

Posted by Unknown  |  at  8:42 AM

காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது சொந்த அண்ணனாலேயே மனித வெடிகுண்டாக மாற்றப்பட்டு தற்கொலை படை தாக்குதலுக்கு கொண்டு செல்லப்பட்ட 10 வயது சிறுமியை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.ஆப்கனில் 10 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமிகளை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோல் 2 தினங்களுக்கு முன்பு எல்லை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய சோப்ஸ்மாய் (10) என்ற சிறுமியை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
     
 
இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது சித்திக் கூறுகையில், Ôதலிபான் தீவிரவாதிகளின் உயர் மட்ட தளபதியாக விளங்கும் ஒருவர் தனது 10 வயது தங்கையை மனித வெடிகுண்டாக மாற்றி அனுப்பி யுள்ளார். அந்த சிறுமிக்கு பட்டனை எப்படி இயக்குவது என்பது கூட தெரியவில்லை. பெரும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு படையினர் அந்த சிறுமியை மீட்டு உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்Õ என்றார்.சிறுமி சோப்ஸ்மாய் டிவிக்கு அளித்த பேட்டியில், தலிபான் தீவிரவாதியான தனது அண்ணன் தான் தன்னை அனுப்பி வைத்ததாக உறுதிப்படுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் இது போல் தலிபான்களால் தற்கொலை படைக்கு பயன்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஏராளமான சிறுவர், சிறுமிகளை அதிபர் ஹமீத் கர்சாய் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top