ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ், கவிஞர்.
இவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார்.
அதாவது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க வேண்டும் என்பதையே அந்த வரதட்சணையாகும்.
தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
10 லட்சம் லைக்சை பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.