மருதானை தொடக்கம் டெக்னிகல் சந்தி ஊடாக கோட்டை ஒல்கோட் மாவத்தையின் ஒருவழிப் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டத்தை அடுத்தே வீதி மூடப்பட்டுள்ளது.
வெலிவேரிய பகுதியில் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரணி செல்லக்கூடாதென கொழும்பு நீதவான் நீதிமன்றம் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.