
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
இப்போட்டியின் போது, டோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கெட் காப்பாளர் பணியை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.
இந்த தசைப்பிடிப்பு சரியாகாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அம்பதி ராயுடு அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். விராட் கோஹ்லி இந்திய அணிக்கு தலைமை தாங்குவார்.