யாழ். இருபாலை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.இருபாலை தெற்கு ஆனந்தபுரம் வீதிப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகலிங்கம் சதீஸ் பிரசாத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் நண்பர்களுடன் வீட்டில் வந்து உறங்கியதாகவும், நேற்றுக்காலை காலையில் எழுந்து பார்க்கும் போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக அயலவர்கள் கூறுகின்றனர்.
இந்த இளைஞனுடன் வீட்டில் தங்கிய நண்பர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் இவ் இளைஞனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.