சாலியவெவ, புளியங்குளம் காட்டுப் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும்போது சந்தேகநபர்களிடம் இருந்த புதையல் அகழ்விற்கு பயன்படும் உபகரணங்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.