
இராணுவ மற்றும் புலனாய்வு கருவிகளுக்காக 49 ஏற்றுமதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் துர்ப்பிரயோகப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு 13.2 பில்லியன் பவுண் பெறுமதியான இராணுவ மற்றும் புலனாய்வு கருவிகளுக்கான 3000 ஏற்றுமதி அனுமதி பத்திரங்களை பிரத்தானியா வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் அடக்கு முறைக்கு பயன்படுத்தக்கூடிய அல்லது பிராந்தியத்தில் மற்றும் உள்நாட்டு மோதல்களை தூண்டக்கூடிய பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்போவதில்லை என கூறியிருந்த பிரித்தானிய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு, பல தரப்பினரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
இது பிரத்தானிய அரசாங்கத்தின் மனித உரிமை தொடர்பான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.