Text Widget

Ads300x250

'இலங்கையில் 51 வீதமான அரசியல் வாதிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர்'

Posted by Admin  |  at  7:39 AM


உலக சனத்தொகையில் நான்குபேரில் ஒருவர் தங்களுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில் நடத்திய புதிய ஆய்வின் போதே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகிலுள்ள நாடுகளில் 107 நாடுகளைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் போதே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 86 வீதமான அரசியல் வாதிகளும் இலங்கையில் 51 வீதமான அரசியல் வாதிகளும் ஊழலில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்தவருடம் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கியமையும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 62 வீதமும், இலங்கையில் 43 வீதமும் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இலஞ்ச மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது என்பது இந்த ஆய்வு சான்று பகருகின்றது என்றும் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் அறிவித்துள்ளது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top