Text Widget

Ads300x250

35,000 அடி உயரத்தில் விமான கதவை திறக்க முயன்ற நட்சத்திர இலங்கை வீரர்

Posted by Admin  |  at  4:03 PM

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கழிவறை என்று நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரிக்கெட் வீரர் அதிக மது போதையில் இருந்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரரின் நடவடிக்கையினால் ஏனைய பயணிகள் பீதியடைந்துள்ளனர். சக வீரர்கள் அவரைத் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மணித்தியாலங்களகாக குறித்த வீரர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகத் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நடு வானில் விமானக் கதவுகளை இழுத்து திறப்பது சாத்தியமில்லை என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தவறுதலாக இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக குறித்த கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top