
அவரது தொழில் கூட்டாளியும், நண்பருமான உமேஷ் கோயங்காவும் விசாரணைக்கு உள்ளானார்.
ராஜஸ்தான் றொயல் அணியின் பங்குகளில் 11.7 சதவீதம் தன்னிடம் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது புகார் அளித்தவர் என்ற முறையில் விசாரணை நடைபெற்றதா என்பது குறித்து பொலிஸார் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஐபிஎல் போட்டியின்போது ஆடுகளத்தின் தன்மை குறித்த விவரங்களை உமேஷ் கோயங்கா, தன்னிடம் கேட்டார் என்று ராஜஸ்தான் அணி வீரர் சித்தார்த் திரிவேதி சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.